மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
நாள்
: 09.06.2014 நேரம்
: மாலை 3.00 மணி
பேரணி தொடங்கிய இடம் : பிச்சையம்மாள்
நினைவு தொடக்கப்பள்ளி M.காப்பிலியபட்டி.
பங்கு பெற்றோர் :
தலைமையாசிரியர் , ஆசிரியைகள், மாணவ,மாணவிகள்.
விழிப்புணர்வு பேரணி பற்றிய சாராம்சம் :-
*உலகின்
அறிய வரப்பிரசாதமான நீரைப் பற்றியும் , அவ்வாறு கிடைக்கும் நீரை எவ்வாறு
சேகரிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு
விழிப்புணர்வு பேரணி பிச்சையம்மாள் நினைவு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ,
மாணவிகளால் நடத்தப்பட்டது.
*நுற்றுக்கும்
மேற்பட்ட மாணவ , மாணவிகள் வரிசையாக நின்று , மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி பற்றிய
வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்திக் கொண்டு தமது பள்ளியை சுற்றியுள்ள
ஊர்களிலுள்ள தெருக்களின் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்
விதமாக மழைநீர் சேமிப்பு பற்றிய கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர்.
*
சேகரிப்போம் ! சேகரிப்போம் !
மழைநீரை சேகரிப்போம் !
*
மழையால் ஆவது உலகு
அதற்கு மரம் வைத்து பழகு.
*
பாலைவனமானாலும் மழைநீர் சேமித்தால்
சோலைவனம் ஆகும் .
*
வான் தரும் மழை – அதை வீணாக்குவது
உன் பிழை.
* இன்றைய தாகத்துக்கு நீர் தரும் பூமி !
நாளைய தேவைக்கு மழைநீரை சேமி !
* மழை நீர் சேமிப்பு , மனைக்கிங்கே அவசியமே !
* காப்போம் ! காப்போம் !
மண்வளம் காப்போம் ! போன்ற
மழை நீர் சேகரிப்பு பற்றிய வாசகங்கள் பேரணியில் இடம் பெற்றிருந்தன.
பின்
மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக
மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரை திரட்டி ஒருங்கே குவித்து சேமித்து வைப்பது
ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு , கால்நடைகளுக்கு ,
நீர்பாசனம் மற்றும் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம் .சில
சூழ்நிலைகளில் மழைநீரை ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய அதிகச் செலவு பிடிக்காத
சிக்கனமான நீர் ஆதாரம் .பசுமை அளவை அதிகரிக்க வீட்டுக்கு ஒருமரம் வளர்க்க வேண்டும்.
தண்ணீரை
தாத்தா ஆற்றில் பார்த்தார் !
அப்பா கிணற்றில் பார்த்தார் !
நாம்
குழாயில் பார்க்கிறோம் !
எனவே ,
இனிவரும் எதிர்காலத்தில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து , இளைய தலைமுறையாகிய
நீங்கள் மரங்களை நட்டு மண்வளம் காத்து மழையைப் பெற்று வளம் பெற வேண்டும் என்ற
தலைமையாசிரியரின் உரையுடன் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நிறைவு பெற்றது.
சார் , வாழ்த்துக்கள்
ReplyDeleteSuper
ReplyDelete