குழந்தை
தொழிலாளர் எதிர்ப்பு தினம்
நாள் : 12 .06.2014
இடம் : பிச்சையம்மாள்
நினைவு தொடக்கப்பள்ளி மைதானம் .
“ஒரு
நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்ளே இருக்கிறது” என்ற
கருத்திற்கிணங்கவும், “குழந்தையின் வருமானம் வீட்டிற்கு அவமானம்” என்ற
வாய்மொழிக்கிணங்கவும், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும்,
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் எங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
குழந்தை
தொழிலாளர்கள் எதிர்ப்பு தின பற்றிய கருத்துக்களை மாணவர்கள் அறிந்து கொள்ள
தலைமையாசிரியரால் உரை நிகழ்த்தப்பட்டது.பின்பு ஆசிரியர் பயிற்றுநர் உரை
நிகழ்த்தினார். அதில் , சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2001-ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி
அபாயகரமான தொழிலில் ஈடுபடும் குழந்தைகளைக் காப்பதற்காக ஒரு சாசனம் இயற்றியது.இந்த நாளே
சர்வதேச குழந்தைகள் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
“ஒருமைக்கண் தான்கற்ற
கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்றும் , அனைவரும் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து கல்வி பயில வேண்டும் எனவும் வலியுத்தப்பட்டது.
எழுமையும் ஏமாப் புடைத்து. என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்றும் , அனைவரும் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து கல்வி பயில வேண்டும் எனவும் வலியுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு
குழந்தை தொழிலாளர் இலவச தொலைப்பேசி எண்ணிணான 1098 என்ற எண்ணினை அறிமுகப்படுத்தி,
அருகில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் இருந்தால் தவகல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
பின்
குழந்தை தொழிலாளர் தினத்தின் கருத்தினை அறிந்து கொண்ட மாணவர்கள் , எம் பள்ளியின்
உதவி ஆசிரியர் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியினை கூற, மாணவர்களும் பின்
தொடர்ந்து கூறி உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.பின் மாணவர்கள் ஒவ்வொருவராக வகுப்பிற்கு கலைந்து செல்ல குழந்தை
தொழிலாளர் எதிப்பு தின நிகழ்ச்சி நிறைவு
பெற்றது.
No comments:
Post a Comment